Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய அரசு முடிவு

ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய அரசு முடிவு

ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய அரசு முடிவு

ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய அரசு முடிவு

UPDATED : அக் 11, 2011 01:15 AMADDED : அக் 09, 2011 11:34 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய, மத்திய தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில், ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனம் பயனடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட, 13 யு.ஏ.எஸ்., உரிமங்களை ரத்து செய்யலாமா என்பது குறித்து, மத்திய தொலைத்தொடர்புத் துறை, விசாரணை நடத்தி வந்தது.சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், தொலைத்தொடர்பு உரிமம் பெறுவதற்கான தகுதியை, ஸ்வான் நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என, கூறப்பட்டது. இதைத் தெடார்ந்து, ஸ்வான் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய, தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம், தொலைத்தொடர்புத் துறை சார்பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



டி.டி.எச்., நிறுவனங்களுக்கு வலை:

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கியுள்ள சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், டி.டி.எச்., தொழிலும் ஈடுபட்டு வருவதாக, விசாரணை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டி.டி.எச்., நிறுவனங்கள் குறித்தும் விசாரணை நடத்த, புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.இதனால், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை வரம்பு, மேலும் விரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆவணங்களை சி.பி.ஐ., ஆய்வு செய்து வருவதாகவும், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு உள்ள தொடர்பு குறித்த விஷயங்களும் இதில் அடங்கும் என்றும், சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையே, '2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த சர்ச்சையை அடுத்து, புதிய தொலைத்தொடர்பு கொள்கையை இன்று அறிவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us