Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

UPDATED : செப் 27, 2011 02:34 PMADDED : செப் 27, 2011 01:01 PM


Google News
திருச்சி:உள்ளாட்சித்தேர்தலைவிட திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வெற்றிதான் முக்கியமானது என தி..மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார். திருச்சியில் மேற்கு இடைத்தேர்தல் தொடர்பான கட்சி ஊழியர்கள் கூட்டம் தில்லை நகர் 5-வது சந்தில் நடந்தது. இக்கூட்டத்தில் செல்வகணபதி, முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வராஜ், எம்.பி. விஜயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இடைத்தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் தி.மு.க. கலைஞர் அறிவாலயத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.வின் வெற்றிக்காக திருச்சி பல திருப்பங்களை தேடி தந்துள்ளது. வரும் உள்ளாட்டசித்தேர்தல் வெற்றியை விட ‌திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வெற்றி தான் முக்கியமானது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தி.மு.க.வை ‌மொத்தமாக அழி்க்க ஜெயலலிதா நினைக்கிறார். அது நடக்காது என்றார்.

வேட்புமனுக்கள் பரிசீலனை: திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரி சம்பத் தலைமையில் அதிகாரிகள் வேட்புமனுக்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us