மினி லாரியிலிருந்து விழுந்தவர் பலி
மினி லாரியிலிருந்து விழுந்தவர் பலி
மினி லாரியிலிருந்து விழுந்தவர் பலி
ADDED : செப் 25, 2011 01:43 AM
தியாகதுருகம்:ரிஷிவந்தியத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி ராஜேந்திரன் மகன்
பிரகாஷ், 21. இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தியாகதுருகத்தில்
இருந்து ரிஷிவந்தியத்திற்கு மினி லாரி மேல் ஏறிச் சென்றார். வடதொரசலூர்
கூட்டுரோடு திருப்பத்தில் திரும்பிய போது மினி லாரியிலிருந்து பிரகாஷ்
நிலைதடுமாறி ரோட்டில்
விழுந்தார்.பலத்த காயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு
எடுத்து செல்லும் வழியில் இறந்தார். தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து
விசாரித்து வருகின்றனர்.