பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 53 பேர் பலி
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 53 பேர் பலி
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 53 பேர் பலி
UPDATED : ஆக 20, 2011 09:57 AM
ADDED : ஆக 19, 2011 04:29 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பழங்குடியினர் பகுதியில் வழிபாட்டு தலமருகே தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் தன் உடம்பில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.
இந்த தாக்குதலில் 53 பேர் பலியானார்கள். 123க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பெஷாவரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.