ADDED : ஜூலை 25, 2011 10:19 PM
வெம்பக்கோட்டை : ஜேசிஐ சிவகாசி டைனமிக் சார்பில், புதிய கிளை இயக்கமாக ராஜபாளையம் டைனமிக் தொடங்கப்பட்டது.தலைவர் சங்கரநாராயணன் வரவேற்றார்.
கோபால்சாமி எம்.எல்.ஏ. ,தலைமை வகித்தார்.ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன்,மண்டலத்தலைவர் நல்லதம்பி முன்னிலை வகித்தனர். இந்தியத் தலைவர் பாலவேலாயுதம் புதிய கிளையை தொடங்கி வைத்தார். சங்க தலைவராக ரமணன்,செயலாளராக விஜயகுமார்,பொருளாளராக நிவாஸ் பதவி ஏற்றனர். முன்னாள் தேசிய இயக்குனர் சுப்புராஜ்,மண்டலத் துணைத்தலைவர் அருண்குமார்,இயக்குனர் கணபதிராமன் கலந்து கொண்டனர். செயலாளர் திருப்பதிராஜ் நன்றி கூறினார். ஏறபாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் செய்திருந்தார்.