வழக்கு தொடர கவர்னர் அனுமதிஎதிர்த்து முதல்வர் எடியூரப்பா மனு
வழக்கு தொடர கவர்னர் அனுமதிஎதிர்த்து முதல்வர் எடியூரப்பா மனு
வழக்கு தொடர கவர்னர் அனுமதிஎதிர்த்து முதல்வர் எடியூரப்பா மனு
ADDED : ஜூலை 15, 2011 12:55 AM
பெங்களூரு;தன் மீது வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி கொடுத்தது தவறு எனக் கூறி, கர்நாடக ஐகோர்ட்டில் முதல்வர் எடியூரப்பா வழக்கு தொடர்ந்துள்ளார்.முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நில மோசடி சம்பந்தமாக வழக்கு தொடர, வழக்கறிஞர்கள் பால்ராஜ், சிராஜுதின் பாஷா ஆகியோருக்கு கவர்னர் அனுமதியளித்தார்.
இந்த வழக்கு, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளது.வழக்கு தொடர அனுமதிக்கப்பட்டு சில மாதங்கள் கழித்து, நில மோசடி வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி கொடுத்தது, அரசியல் சாசனப்படி தவறு என, முதல்வர் எடியூரப்பா, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில், கவர்னர் ஒரு சார்பாக செயல்பட்டுள்ளார். தனக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கொடுத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இது குறித்து ஐகோர்ட் பரிசீலனை செய்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கு, இன்றைக்கு (15ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.