10 ம் வகுப்பு மாணவரான இவர் , ஆக.,30 முதல் காணாமல் போனார். இவரை கடத்தி வைத்திருப்பதாகக்கூறி, மர்ம கும்பல் ரூ.25 லட்சம் கேட்டு போனில் மிரட்டியது. கும்பல் கொடுத்த வங்கி கணக்குப்படி, திண்டுக்கலில் உள்ள ஆண்டவர், அவரது சகோதரர்கள் பழனிச்சாமி, ஈஸ்வரனை பிடித்து விசாரிக்கின்றனர். இதனிடையே, ஊர் திரும்பிய மாணவனை போலீசார் மீட்டனர். வீட்டில் கோபித்து திருச்செந்தார் சென்றாக கூறினார். விசாரணைக்கு பின் , சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்திய போலீசார் , பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்த பின்பும், ரமேஷ்பாண்டியன் மொபைலில் இந்தியில் பேசும் நபர், ''பணத்தை வங்கியில் செலுத்தாவிட்டால், மகனை கொன்று விடுவதாக,'' மிரட்டுகிறார். மிரட்டல் வரும் மொபைல் எண் 13 இலக்கமாக இருப்பதால் , எண்ணை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. மிரட்டல் போனால் மாணவனின் குடும்பத்தினரும் பீதியில் உள்ளனர். 3 பேர் கைது: மொபைல் போனில் மிரட்டிய நபர் கொடுத்த வங்கி கணக்கு ,திண்டுக்கல் அருகே குழிப்பட்டியை சேர்ந்த ஆண்டவருடையது என்பது தெரிந்தது. அதன்படி போலீசார் , ஆண்டவர், அவரது சகோதரர்கள் பழனிச்சாமி, ஈஸ்வரனை விசாரித்தனர். இவர்களை சிவகாசி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர் .
10 ம் வகுப்பு மாணவரான இவர் , ஆக.,30 முதல் காணாமல் போனார். இவரை கடத்தி வைத்திருப்பதாகக்கூறி, மர்ம கும்பல் ரூ.25 லட்சம் கேட்டு போனில் மிரட்டியது. கும்பல் கொடுத்த வங்கி கணக்குப்படி, திண்டுக்கலில் உள்ள ஆண்டவர், அவரது சகோதரர்கள் பழனிச்சாமி, ஈஸ்வரனை பிடித்து விசாரிக்கின்றனர். இதனிடையே, ஊர் திரும்பிய மாணவனை போலீசார் மீட்டனர். வீட்டில் கோபித்து திருச்செந்தார் சென்றாக கூறினார். விசாரணைக்கு பின் , சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்திய போலீசார் , பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்த பின்பும், ரமேஷ்பாண்டியன் மொபைலில் இந்தியில் பேசும் நபர், ''பணத்தை வங்கியில் செலுத்தாவிட்டால், மகனை கொன்று விடுவதாக,'' மிரட்டுகிறார். மிரட்டல் வரும் மொபைல் எண் 13 இலக்கமாக இருப்பதால் , எண்ணை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. மிரட்டல் போனால் மாணவனின் குடும்பத்தினரும் பீதியில் உள்ளனர். 3 பேர் கைது: மொபைல் போனில் மிரட்டிய நபர் கொடுத்த வங்கி கணக்கு ,திண்டுக்கல் அருகே குழிப்பட்டியை சேர்ந்த ஆண்டவருடையது என்பது தெரிந்தது. அதன்படி போலீசார் , ஆண்டவர், அவரது சகோதரர்கள் பழனிச்சாமி, ஈஸ்வரனை விசாரித்தனர். இவர்களை சிவகாசி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர் .