/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மைலப்பபுரத்தில் குடிநீர் குழாய் திறப்புமைலப்பபுரத்தில் குடிநீர் குழாய் திறப்பு
மைலப்பபுரத்தில் குடிநீர் குழாய் திறப்பு
மைலப்பபுரத்தில் குடிநீர் குழாய் திறப்பு
மைலப்பபுரத்தில் குடிநீர் குழாய் திறப்பு
ADDED : ஆக 05, 2011 02:58 AM
ஆழ்வார்குறிச்சி : மைலப்பபுரத்தில் குடிநீர் குழாய் திறப்பு விழா நடந்தது.மைலப்பபுரம் பரிசுத்த அந்திரேயா ஆலய வளாகத்தில் டி.டி.டி.ஏ.பள்ளி மாணவ, மாணவிகளுக்காக புதிய குடிநீர் குழாய் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பால்துரை தலைமை வகித்தார். நெல்லை திருமண்டல முன்னாள் டி.சி.மெம்பர்கள் செல்வின், சுந்தரராஜ் முன்னிலை வகித்தனர். நெல்லை திருமண்டல டி.சி.மெம்பர் எட்வின் செல்வமணி வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவியருக்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் நல்லியை கோவிலூற்று சேகரகுரு ஜான்கென்னடி திறந்து வைத்து பேசினார்.விழாவில் சேகர கமிட்டி உறுப்பினர்கள் ஸ்டீபன்நீல், செல்லத்துரை, ஆரோக்கியகோயில், எபன்ராஜ், அந்திரேயா, ஆல்பர்ட் ஸ்டீபன், பாஸ்கர் சுவிஷேசராஜா, முன்னாள் கமிட்டி உறுப்பினர்கள் சவுந்திரராஜன், செல்லத்துரை, பள்ளி மாணவ, மாணவிகள், சபை மக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக அன்பின் திருவிருந்து ஆராதனை நடந்தது. ஆரோக்கிய கோயில் நன்றி கூறினார்.