கள்ளக்காதலால் கிரைண்டர் கல்லால் தாக்கி கணவரை கொலை செய்த கொடூர மனைவி
கள்ளக்காதலால் கிரைண்டர் கல்லால் தாக்கி கணவரை கொலை செய்த கொடூர மனைவி
கள்ளக்காதலால் கிரைண்டர் கல்லால் தாக்கி கணவரை கொலை செய்த கொடூர மனைவி
சிவகாசி: கள்ளக்காதல் மோகத்தால், கணவரை கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்த, மனைவி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி விஸ்வநத்தம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் கருணை மகாராஜன் என்பவரது கிணற்றில், கால்கள் கட்டப்பட்டு, தலை சிதைந்த நிலையில், 45 வயதுள்ள ஆண் உடல் மிதந்தது.
அதன்படி, ஜூலை 25ல் குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் சந்தனமாரி கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதற்கு கள்ளக்காதலனும் துணையாக இருந்துள்ளார். இறந்த கணவரின் கால்களை கிரைண்டர் கல் சங்கிலி, நைலான் கயிற்றால் கட்டி, உடலை சாக்குமூட்டைக்குள் வைத்துள்ளனர். பின்னர், லட்சுமணன் தம்பி கணேச பாண்டியன்,30, என்பவரை தள்ளுவண்டியுடன் வரவழைத்துள்ளனர். இரவில் வீட்டை காலி செய்வது போல், மூட்டை முடிச்சுகளுடன் கணவரின் உடலையும் தள்ளுவண்டியில் வைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத கிணற்றில் கொண்டு போய் வீசினர். உடல் வெளியே வராதபடி, கால்களில் கிரைண்டர் கல்லையும் சேர்த்து கட்டியது' தெரிந்தது. இதைத் தொடர்ந்து சென்னைக்கு தப்ப முயன்ற சந்தனமாரி, லட்சுமணன் மற்றும் உடந்தையாக இருந்த கணேச பாண்டியனை, போலீசார் கைது செய்தனர். சந்தனமாரி, வீரசிங்கம் தம்பதிக்கு இரண்டு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் முடிந்துள்ளது.


