தமிழக அரசின் சிறு, குறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடி
தமிழக அரசின் சிறு, குறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடி
தமிழக அரசின் சிறு, குறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடி
அரிசி ஆலை நிறுவுதல், காற்றாலை மின் உற்பத்தி, கிடங்கு, திருமண மண்டபம், மருத்துவமனை போன்ற சேவை நிறுவனங்கள் தொடங்குவதற்கும் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நடத்துவோர், அதிகளவில் பயன் அடைந்து வருகின்றனர்.தமிழகத்தில், மிகவும் பின்தங்கிய பகுதியில், தொழில் தொடங்குவோருக்கு அரசு மானியமாக, 15 சதவீதம் அல்லது, 30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 'டிக்' நிறுவனத்திடம் கடன் பெற்று, தொழில் துவக்கினால், அரசிடமிருந்து மானியத்தை பெற்று, இந்நிறுவனமே தருகிறது.
மத்திய அரசு, சி.எல்.சி.எஸ்., என அழைக்கப்படும், 'கிரெடிட் லிங்க் கேபிடல் சப்சிடி' எனும் மூலதனத்துடன் கூடிய மானியத்தை வழங்குகிறது. அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தையும் அரசிடமிருந்து,'டிக்' பெற்றுத் தருகிறது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வட்டி தள்ளுபடி செய்வதன் மூலம், கடன் பெறுவோர் எண்ணிக்கை மேலும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் வட்டிச் சலுகை, புதிய கடனுக்கு மட்டுமல்லாமல், தொழிலை விரிவுபடுத்த விரும்புவோருக்கும் வழங்க வேண்டும். மேலும், பெண் தொழில் முனைவோருக்கு, தள்ளுபடி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும், எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து குறு, சிறு, நடுத்தர தொழில்கள் சங்க முன்னாள் தலைவர் ஒருவர் கூறியதாவது:ஆரம்ப காலத்தில், தொழில் துவங்க வங்கி கடன் என்பது சற்று சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில், தொழில் துறைக்கு, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு முன்னுரிமையளித்து, புதிய தொழில் முனைவோர் தொழில் துவங்க, 'டிக்' பெரிதும் உதவி வருகிறது.நடைமுறை மூலதனம் பற்றாக்குறையாக இருப்பவர்களுக்கும் கடன் வழங்கப்படுவது, 'டிக்' நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு. தற்போது, 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என, அரசு அறிவித்துள்ளது. புதிதாக கடன் வாங்கி தொழில் துவங்குபவர்களுக்கு மட்டுமில்லாமல், இருக்கின்ற தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் வட்டி தள்ளுபடி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
'டிக்' நிறுவனத்தின் செயல்பாடு:'டிக்' நிறுவனம், கடந்த, 2008-09ல், 1,262 தொழில்களுக்கு, 538 கோடி ரூபாய் கடன் அனுமதிக்கப்பட்டு, 416 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 381 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 2009-10ல், 1,908 தொழில்களுக்கு, 668 கோடி அனுமதிக்கப்பட்டு, 570 கோடி வழங்கி, 495 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சென்ற நிதியாண்டில், 4,190 தொழில்களுக்கு, 939 கோடி அனுமதிக்கப்பட்டு, 735 கோடி வழங்கி, 709 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நடப்பாண்டில், 1,350 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.