ADDED : செப் 25, 2011 09:41 PM
தேனி:உள்ளாட்சி தேர்தலில் கிராம பகுதி வாக்காளர்கள் நான்கு ஓட்டுக்களும்,
பேரூராட்சி, நகராட்சி வாக்காளர்கள் இரண்டு ஓட்டுக்களும் போட வேண்டி உள்ளது
கிராம ஊராட்சிகளில் ஓட்டுச்சீட்டும், பேரூராட்சி, நகராட்சிகளில்
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
முதன்முறையாக மக்கள் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் இரண்டு ஓட்டுகள் போட
உள்ளனர். இதனால் கிராமங்களிலும், பேரூராட்சி, நகராட்சிகளிலும்
ஓட்டுப்போடும் முறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல்
பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.