/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு காஸ்மோபாலிட்டன் பாராட்டுதேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு காஸ்மோபாலிட்டன் பாராட்டு
தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு காஸ்மோபாலிட்டன் பாராட்டு
தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு காஸ்மோபாலிட்டன் பாராட்டு
தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு காஸ்மோபாலிட்டன் பாராட்டு
ADDED : செப் 20, 2011 10:47 PM
புதுச்சேரி : காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம் சார்பில் 10ம் வகுப்பு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அளித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் 90 மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி அளித்து, அரசின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சார்பில் ஓட்டல் விஜயேந்திராவில் நடந்தது. லயன்ஸ் சாம்ராஜ் தலைமை தாங்கினார். செந்தில்குமார் வரவேற்றார். பேராசிரியர் இளங்கோ சிறப்புரையாற்றினார். விழாவில் மேனாள் ஆளுநர் செல்வகாந்தி, மண்டலத் தலைவர் பாஷிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாவலர் கோ வாழ்த்து கவிதை வழங்கினார். ஆதித்யா வியாஷ்ரம தாளாளர் ஆனந்தன் பங்கேற்று, பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்து அரசின் ஒரு லட்ச ரூபாய் ஊக்கப் பரிசு பெற்ற 185 அரசு பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியை பொறியாளர் தேவதாஸ் தொகுத்து வழங்கினார். வேல்முருகன் நன்றி கூறினார்.


