"யு.பி.எஸ்.சி., நேர்முக தேர்வை மாநில மொழிகளில் எதிர்கொள்ளலாம்'
"யு.பி.எஸ்.சி., நேர்முக தேர்வை மாநில மொழிகளில் எதிர்கொள்ளலாம்'
"யு.பி.எஸ்.சி., நேர்முக தேர்வை மாநில மொழிகளில் எதிர்கொள்ளலாம்'

மும்பை : 'யு.பி.எஸ்.சி., பிரதான தேர்வை ஆங்கிலத்தில் எழுதியவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளிலும், நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளலாம்' என, மும்பை ஐகோர்ட்டில், யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
இதற்கு, யு.பி.எஸ்.சி., ( மத்திய பணியாளர் தேர்வாணையம்) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நேர்முகத் தேர்வில் பின்பற்றப்படும் விதிமுறைகளை, நிபுணர் குழு ஆய்வு செய்து, சில பரிந்துரைகளை அளித்துள்ளது. இதன்படி, பிரதான தேர்வை மாநில மொழிகளில் எழுதியவர்கள், யு.பி.எஸ்.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகள் (பிரதான தேர்வு எழுதிய மொழி), ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழியில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளலாம். அதே நேரத்தில், ஆங்கிலத்தில் பிரதான தேர்வை எழுதியவர்கள், இந்தி, ஆங்கிலம் அல்லது, அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளலாம். இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த பொதுநல மனுவை, மும்பை ஐகோர்ட், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.