'எங்களிடம் அசுர பலம் இருக்கு' அணிவகுத்து காட்டியது சீனா
'எங்களிடம் அசுர பலம் இருக்கு' அணிவகுத்து காட்டியது சீனா
'எங்களிடம் அசுர பலம் இருக்கு' அணிவகுத்து காட்டியது சீனா


25 நாடுகள்
இந்நிலையில், 8-0வது வெற்றி தினத்தையொட்டி, நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கில் பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்புன் நேற்று நடந்தது. இதுபோன்ற பிரமாண்ட பேரணி, 10 ஆண்டுக்கு முன் நடத்தப்பட்டது.


அனுமதியில்லை
சீனாவின் அதிநவீன ஆயுதங்கள் இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. ஹைப்பர்சோனிக் எனப்படும் ஒலியின் வேகத்தில் செல்லக்கூடிய புதிய தலைமுறை ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், நீர்மூழ்கி ட்ரோன்கள், போர் விமானங்கள், விமானங்கள் செயல்பாட்டை தடுக்கும் கருவிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றன. அத்துடன் 12,000 ராணுவ வீரர்களும் அணிவகுத்து சென்றனர்.
ராணுவ அணிவகுப்புக்கு பின் உலக நாடுகளின் தலைவர்களுடன் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது:
உலகம் ஒருபோதும் காட்டாட்சி சட்டத்திற்கு திரும்பக் கூடாது. அது பலவீனமானவர்களை வலிமையானவர்கள் சுரண்டும் இடம். சீன மக்களின் எழுச்சியை யாராலும் தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது. நாங்கள் ஒருபோதும் பயப்படமாட்டோம். உலகை வழி நடத்தும் நாடுகளில் சீனாவும் ஒன்று.