Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டது; 15 பேர் பலி; 18 பேர் காயம்

போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டது; 15 பேர் பலி; 18 பேர் காயம்

போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டது; 15 பேர் பலி; 18 பேர் காயம்

போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டது; 15 பேர் பலி; 18 பேர் காயம்

ADDED : செப் 04, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் கார் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர்.

ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குளோரியா புனிகுலர் ரயில், நகரத்தின் வரலாற்று சின்னமாகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இவர்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது.

உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 5 பேர் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ச்சுகல் அரசு தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சோகமான நாள்

லிஸ்பன் மேயர் கார்லோஸ் மொய்டாஸ் கூறியதாவது: எங்கள் நகரத்திற்கு இது சோகமான நாள். லிஸ்பன் துக்கத்தில் மூழ்கி உள்ளது, என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us