உ.பி., ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : விபத்திற்கான காரணம் தெரியாததால் திகைப்பு
உ.பி., ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : விபத்திற்கான காரணம் தெரியாததால் திகைப்பு
உ.பி., ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : விபத்திற்கான காரணம் தெரியாததால் திகைப்பு

பதேபூர் : உ.பி.,யில் நடந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 63 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று, ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் இருந்து, 25 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 63 ஆக அதிகரித்துள்ளது. 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள், கான்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில்வே குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், 180 ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம் சார்பில் விபத்து நடந்த இடத்தில், தற்காலிக மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில், 10 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டில்லி - ஹவுரா வழித் தடத்தில் செல்லும், 34 ரயில்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பதேபூர் மாவட்ட எஸ்.பி., ராம் பரோஸ் கூறுகையில், ''இதுவரை, 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில், சுவீடனைச் சேர்ந்த மேலும் சிலர் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம்,'' என்றார்.
ரயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் கூறியதாவது: மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நாளை (இன்று) காலைக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். இதன்பின், டில்லி - ஹவுரா வழித் தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். விபத்து குறித்து , ரயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் (லக்னோ) பிரஷாந்த் குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். ரயில் தண்டவாளத்தில் விரிசலோ, நாச வேலையோ நடக்கவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் ரயில் வந்தபோது, இன்ஜின் குலுங்கியதாகவும், பெரிய அளவில் புகை வெளியேறியதாகவும், அதன்பின், ரயில் தடம் புரண்டதாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சிக்னல் வழக்கம் போல் இயங்கியதும் தெரியவந்துள்ளது. இதுவரை மீட்கப்பட்ட உடல்களில், 21 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.இவ்வாறு மிட்டல் கூறினார்.
இதற்கிடையே, ரயிலில் இருந்து மீட்கப்பட்ட, 167 பயணிகள், சிறப்பு ரயில் மூலம், டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில், சமர் என்ற ஐந்து வயது சிறுவனும் அடக்கம். விபத்து நடந்தது குறித்து, தங்கள் உறவினர்களிடம், அதிர்ச்சி விலகாத கண்களுடன், அவர்கள் விவரித்தனர். காயத்துடன் வந்தவர்களுக்கு, டில்லி ரயில்வே ஸ்டேஷனில் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். விபத்து நடந்த இடத்துக்கு, உ.பி., கவர்னர் பி.எல்.ஜோஷி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எப்படி நடந்தது விபத்து?