ADDED : ஜூலை 19, 2011 12:34 AM
கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியம் அங்கன்வாடிமைய வளாகத்தில் உலக மக்கள் தொகை நாள் கண்காட்சி முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பிச்சைக்காரன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார விரிவாக்க கல்வியாளர் மகாதேவன், புள்ளியாளர் அமிர்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் துரைமுருகன், தெய்வீகன் செய்தனர்.