ADDED : ஜூலை 13, 2011 11:43 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தாம்பிகை ஐ.டி.ஐயில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.தாசில்தார் சரவணன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.
முதல்வர் ராஜசேகர், துணை முதல்வர் ஞானபிரகாசம், ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.முகாமில் ஹூண்டாய், என்.சி.ஆர்கார்பரேஷன், பாபு மோட்டார் உள்ளிட்ட 10 நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர்.வெல்டர், எலக்ரிக்கல், மெக்கானிக் உள்ளிட்ட வேலைகளுக்கான தேர்வு நடந்தது.விருத்தாம்பிகை மற்றும் பல்வேறு நிறுவனங்களில் ஐ.டி.ஐமுடித்த மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.


