வட இந்தியர்கள் மீது ராஜ்தாக்கரே தாக்கு
வட இந்தியர்கள் மீது ராஜ்தாக்கரே தாக்கு
வட இந்தியர்கள் மீது ராஜ்தாக்கரே தாக்கு
ADDED : ஜூலை 19, 2011 04:57 PM
மும்பை: மும்பையில் வட இந்தியர்கள்அதிக அளவில் குடிபெயர்வதே மும்பை குண்டுவெடிப்புக்கு காரணம் என்று கூறினார்.
மேலும் அவர் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும். மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணையின் போது மரணமடைந்த பையாஸ் உஸ்மானி மரணம் குறித்து இரங்கல் தெரிவித்ததற்காக சமாஜ்வாடி கட்சியின் அபு ஆசிம் ஆஸ்மிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். இங்கு குடிபெயர்வர்கள் கிரிமினல் குற்றங்களுடன் நேபாளத்திலிருந்து உத்திரபிரதேச வழியாக வருகின்றனர். இங்கு பதிவாகும் குற்ற வழக்குகளில் 60 முதல் 70 சதவீதம் வரை பதிவாகின்றன. இந்த வழக்கில் குற்றவாளிகளை தேடி உ.பி., மற்றும்பீகாருக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே வட இந்தியர்கள் குறித்து ராஜ் தாக்கரே தெரிவித்த கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்த பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


