தபால் துறை ஆயுள் காப்பீட்டு பணிகள் : இன்று முதல் பரவலாக்கல்
தபால் துறை ஆயுள் காப்பீட்டு பணிகள் : இன்று முதல் பரவலாக்கல்
தபால் துறை ஆயுள் காப்பீட்டு பணிகள் : இன்று முதல் பரவலாக்கல்
ADDED : ஆக 03, 2011 12:57 AM
சென்னை : மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான தபால்துறை ஆயுள் காப்பீடு தொடர்பான பணிகள், இன்று முதல் பரவலாக்கப்படுகிறது.
கடந்த, 150 ஆண்டுகளாக, மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான தபால் துறை ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், இத்திட்டத்தில், 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் பாலிசிதாரர்களாக உள்ளனர். காப்பீட்டுக்கான பாலிசி ஆவணங்கள் வழங்கல் மற்றும் ஏற்பு உள்ளிட்ட பணிகள், தலைமை தபால் துறை தலைவர் அலுவலகத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்நிலையில், காப்பீடு திட்டப்பணிகளை விரைவுப்படுத்தும் நோக்கில், இன்று முதல், தபால்துறை ஆயுள் காப்பீட்டுப் பணிகள் கோட்ட அளவிலான கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்படுகிறது.


