/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மகாபாரதி கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழாமகாபாரதி கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
மகாபாரதி கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
மகாபாரதி கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
மகாபாரதி கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஆக 28, 2011 11:19 PM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த வாசுதேவனூர் மகாபாரதி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவில் கல்லூரி சேர்மன் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் செழியன், பொருளாளர் நல்லியப்பன், துணை தலைவர் பழனியப்பன், இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இயக்குனர்கள் பாலகுமார், சுந்தரம் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் குமார் வரவேற்றார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீபா சீனுவாசன் மற்றும் அம்சவள்ளி, செந்தில்குமார், முகமத் யாகூதின் உட்பட பலர் பேசினர். விரிவுரையாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.


