ADDED : செப் 04, 2011 11:21 PM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் 50 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றார். அங்கு கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் கேனை சோதனை செய்தபோது, அதில் 50 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் இருந்தது. இதனை டி.எஸ்.ஓ., சீனிவாசன் உத்தரவின்பேரில் வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.