ADDED : ஜூலை 24, 2011 02:35 AM
குன்னூர் : சர்வதேச மனித உரிமைகள் கழகத்தின் குன்னூர் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
மும்பை வெடிகுண்டு விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சி சார்பில் சுகாதாரப் பணி முனைப்புடன் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. குன்னூர் - கோத்தகிரி இடையே காலை நேரத்தில் கூடுதல் பஸ் விட வேண்டும். அமைப்பின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் சுயநலமில்லாமல், பொது நல நோக்கோடு சேவை செய்ய வேண்டும் என்பன உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட அமைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமைவகித்தார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், நிர்வாக குழு உறுப்பினர் ஹேவந்த்குமார் ஜெயின் முன்னிலை வகித்தனர். துணை அமைப்பாளர் வினோத்குமார், பெள்ளி, துøராஜ், பிரபாவதி, பேராசிரியை சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.


