/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்
செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்
செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்
செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்
செஞ்சி : செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் தற்போதைய சேர்மன் மஸ்தான் நேற்று மனு தாக்கல் செய்தார்.
பகல் 12.40 மணிக்கு வந்த மஸ்தான் காரை விட்டு இறங்கியதும் ஓட்டமும், நடையுமாக பேரூராட்சி அலுவலகத்திற்குள் சென்று தலைவர் அறையில் அமர்ந்தார். அலுவலக கேட்டை போலீசார் மூடியதால், அவர்களுக்கு எதிராக தி.மு. க.,வினர் கோஷம் எழுப்பினர்.பகல் 1.05க்கு மஸ்தான் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் கண்ணன், பஞ்சாட்சரம், மனுவை முன்மொழிந்த லோக ஜெயராமன், கணேசன் உடனிருந்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் காரில் ஏறி மஸ்தான் புறப்பட்டார். செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் ஏராளமான போலீசார் மனு தாக்கலின் போது இருந்தும் மஸ்தானை கைது செய்யாமல் போனது தி.மு.க.,வினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.