திகார் சிறையில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை உயர்வு
திகார் சிறையில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை உயர்வு
திகார் சிறையில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை உயர்வு

புதுடில்லி: டில்லியில் உள்ள திகார் சிறையில், ஊழல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, மத்திய அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகளுக்குபத்ம விருதுகள் கிடையாது:'அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, பத்ம விருதுகள் வழங்கப்பட மாட்டாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியதாவது:அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, பத்ம விருதுகள் கொடுப்பதில்லை என்ற முடிவை, அரசு எடுத்துள்ளது. எனவே, பத்ம விருதுக்கான பிரிவில், அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் இடம்பெற மாட்டார்கள். அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சிறப்பான சேவையை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் பிரதமர் விருது வழங்கப்படுகிறது. கடந்த 2007ல் இருந்து, இந்த விருது வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் தனிப்பட்ட அதிகாரிகள் அல்லது அதிகாரிகள் அடங்கிய குழு, இந்த விருது பெறுவதற்கு தகுதி உடையவர்களாக கருதப்படுகின்றனர்.இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.