ADDED : ஆக 17, 2011 10:28 AM
சென்னை: வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ரூ.3 லட்சமாக அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்த நிவாரத்தொகை ரூ. 1.5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


