கிராமப்புற பெண்களுக்கு இலவச "சானிடரி நாப்கின்' : இந்த ஆண்டு 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
கிராமப்புற பெண்களுக்கு இலவச "சானிடரி நாப்கின்' : இந்த ஆண்டு 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
கிராமப்புற பெண்களுக்கு இலவச "சானிடரி நாப்கின்' : இந்த ஆண்டு 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
சென்னை : கிராமப்புற பெண்களுக்கு, இலவசமாக 'சானிடரி நாப்கின்' வழங்கப்படும் என்றும், இதற்காக நடப்பாண்டில், 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு நிர்வாகத்துக்காக, தனி ஆணையரகம் உருவாக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப உணவு-மருந்துக் கட்டுப்பாடு சோதனைக் கூடங்கள் நவீனப்படுத்தி தரம் உயர்த்தப்படும். இதற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 'முதலமைச்சரின் விரிவான பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு,' 166 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,028 ஆகவும், பேறு காலத்தில் பெண்களின் இறப்பு விகிதம் 1,080 ஆகவும் உள்ளது. இதை மேலும் குறைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தேசிய ஊரக சுகாதார நலத் திட்டத்துக்காக, நடப்பாண்டில் 900 கோடி செலவிடப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.