/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குரூப் 2 தேர்வு மையம் கலெக்டர் நேரில் ஆய்வுகுரூப் 2 தேர்வு மையம் கலெக்டர் நேரில் ஆய்வு
குரூப் 2 தேர்வு மையம் கலெக்டர் நேரில் ஆய்வு
குரூப் 2 தேர்வு மையம் கலெக்டர் நேரில் ஆய்வு
குரூப் 2 தேர்வு மையம் கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : ஜூலை 31, 2011 01:15 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 28 தேர்வு மையங்களில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 2 எழுத்து தேர்வு நடந்தது.
தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 18 மையங்களில் 9460 பேரும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் ஆறு மையங்களில் 4844 பேரும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் நான்கு மையங்களில் 2219 பேரும் மொத்தம் 18 ஆயிரத்து 523 பேர் தேர்வு எழுதினார்கள்.கலெக்டர் பாஸ்கரன் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தையும், டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தையும் நேரில் பார்வையிட்டார்.ஆய்வின் போது, டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் சென்றார்.


