Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மத்திய அரசை நிர்பந்தப்படுத்துகிறார் ஹசாரே: பிரதமர்

மத்திய அரசை நிர்பந்தப்படுத்துகிறார் ஹசாரே: பிரதமர்

மத்திய அரசை நிர்பந்தப்படுத்துகிறார் ஹசாரே: பிரதமர்

மத்திய அரசை நிர்பந்தப்படுத்துகிறார் ஹசாரே: பிரதமர்

UPDATED : ஆக 17, 2011 11:15 AMADDED : ஆக 17, 2011 11:11 AM


Google News

புதுடில்லி: லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டதையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை ஹசாரே நிர்பந்தப்படுத்துவதாக பிரதமர் மன்மேகான் சிங் தெரிவித்தார்.

ஹசாரே கைது தொடர்பாக லோக்சபாவில் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், அன்னா ஹசாரே கைது தொடர்பாக நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன என்று தெரிவித்தார். அன்னா ஹசாரேவும் அவரது இளம் ஆதரவாளர்களும் ஜன்லோக்பால் மசோதா பார்லிமென்டில் நிறைவேறவேண்டும் என விரும்புகின்றனர். லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டதையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என ஹசாரே நிர்பந்தப்படுத்துகிறார் என்றும் தெரிவித்தார். கடந்த 15ம்தேதி, போலீசார் விதித்த 6 நிபந்தனைகளை ஹசாரே ஏற்கவில்லை. இதையடுத்து அவரை கைது செய்வதைத்தவிர டில்லி போலீசாருக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us