UPDATED : ஆக 17, 2011 06:08 PM
ADDED : ஆக 17, 2011 03:44 PM
புதுடில்லி: உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்காத வரை அன்னா ஹசாரே சிறையிலிருந்து வெளியே வரமாட்டார் என ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
மேலும் அவர் போராட்டத்தை ராம்லீலா மைதானத்தில் நடத்த தயார். ஆனால் 5 நாட்கள் மட்டுமே அனுமதி என்பதை ஏற்க முடியாது. குறைந்தது ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வேண்டும். உண்ணாவிரதத்துக்கு காலவரையறை விதிப்பதை அன்னா விரும்பவில்லை என கூறினார்.


