குடும்ப தகராறு: 5 பேர் மீது வழக்கு
குடும்ப தகராறு: 5 பேர் மீது வழக்கு
குடும்ப தகராறு: 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 13, 2011 01:37 AM
திட்டக்குடி : குடும்பத் தகராறில் ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்
பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராமநத்தம் அடுத்த மா.புடையூர் கிராமத்தைச்
சேர்ந்தவர் கரிகாலன், 39. இவர் நேற்று முன்தினம் தனது மனைவியை
திட்டினார். இதனை அதே பகுதியை சேர்ந்த உறவினர் செல்வராஜ்,52, கண்டித்ததால்
ஆத்திரமடைந்த கரிகாலன், செல்வராஜை கத்தியை காட்டி மிரட்டினார். இது
குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் கரிகாலன்
மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் செல்வராஜ் மகன்கள்
சங்கர், பாஸ்கர், உறவினர் பெரியசாமி ஆகியோர் நேற்று கரிகாலனை அருகில் உள்ள
பட்டறை இரும்புத் தூணில் கட்டி வைத்து தாக்கினர். காயமடைந்த கரிகாலன்
திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து
கரிகாலன் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ், சங்கர், பாஸ்கர், பெரியசாமி
ஆகியோர் மீது ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.