Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்

ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்

ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்

ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்

UPDATED : ஆக 19, 2011 09:35 AMADDED : ஆக 19, 2011 07:17 AM


Google News
ஜெருசலேம்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடந்த விமான தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக நேற்று தெற்கு இஸ்ரேலில் உள்ள எகிப்து எல்லையில் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் 7 இஸ்ரேலியர்களை கொடூரமாக சுட்டுக்கொன்றான். பழி்க்குபழியாக நடந்த இந்த சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் செங்கடல் பகுதியில் இஸ்ரேல்- எகிப்து எல்லையில் உள்ள இலியாட் பகுதி . இப்பகுதி வழியாக பாலஸ்தீனியர்கள் அடிக்கடி ஊடுருவி வருவதாக புகார் எழுந்தது. இதற்கு இஸ்ரேல் , எகிப்தின் புதிய அரசின் மீது கடுமையான குற்றம் சுமத்தி வந்தது.இந்நிலையில் நேற்று பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிக்குபழியாக நேற்று தெற்கு இஸ்ரேலின் எகிப்து எல்லைப்பகுதியில் பாலைப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம ஆசாமி, சரமாரியாக சுட்டதில் 7 இஸ்ரேலியர்கள் பலியாகினர். பாலஸ்தீனியர்களின் இந்த செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று டி.வி.வாயிலாக பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தது இல்லை என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us