எரிமலை சுற்றுலா
எரிமலை என்றாலே பயப்படுகின்றோம்.
தகவல் சுரங்கம்
அகில இந்திய சர்வோதய மாநாடு
காந்தியடிகள் மறைந்த 40 நாட்களுக்கு பின், நேரு, வினோபா, ராஜேந்திர பிரசாத், ஜெயப் பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட அன்றைய காந்தியத் தலைவர்கள் அனைவரும், மகாராஷ்டிராவில் சேவாகிராமில் ஒன்று கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.அப்போது தான் அனைத்து காந்திய அமைப்பு களும் இணைந்து 'சர்வோதய சமாஜ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுக்கு ஒரு முறை கூடிப்பேசி விவாதித்து தங்களுடைய அனுபவங் களை, சக சர்வோதய அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
முதல் அகில இந்திய சர்வோதய சம்மேளனம், 1949 மார்ச்சில் ராஜேந்திர பிரசாத் தலைமையில் இந்தூரில் நடந்தது. 43வது சர்வோதய சமாஜ் மாநாடு கவுகாத்தியில் சென்ற ஆண்டு நடந்தது. 44வது சர்வோதய மாநாடு டிசம்பர் 29, 30, 31ல் மதுரையில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் காஞ்சிபுரத்திலும், மன்னார்குடியிலும் அகில இந்திய சர்வோதய சமாஜ் சம்மேளனம் நடைபெற்றுள்ளன.