Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இரண்டு பைக்குகள் மோதல் மரக்காணம் அருகே இருவர் பலி

இரண்டு பைக்குகள் மோதல் மரக்காணம் அருகே இருவர் பலி

இரண்டு பைக்குகள் மோதல் மரக்காணம் அருகே இருவர் பலி

இரண்டு பைக்குகள் மோதல் மரக்காணம் அருகே இருவர் பலி

ADDED : ஜூலை 26, 2011 01:22 AM


Google News

மரக்காணம் : மரக்காணம் அருகே, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், இரண்டு பேர் இறந்தனர்.

கேரள மாநிலம் பிரின்ஸ் நகரைச் சேர்ந்த தாமஸ் மகன் தோனிதாமஸ், 23. இவரது நண்பர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ராம் மகன் அரி, 23. இருவரும் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில், மரக்காணம் அடுத்த, செட்டிக்குப்பம் அருகே சென்ற போது, விஷ்ணுவரதன், 23, என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது, நேருக்கு நேர் மோதியது. பலத்த காயமடைந்த மூன்று பேரும், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தோனிதாமஸ், விஷ்ணுவரதன் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஆபத்தான நிலையில் அரி சிகிச்சை பெற்று வருகிறார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us