Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ.37 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள்

ரூ.37 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள்

ரூ.37 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள்

ரூ.37 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள்

ADDED : ஆக 11, 2011 12:23 AM


Google News
புதுடில்லி: 'ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் வாங்க, கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.37 ஆயிரம் கோடிக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என, ராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2004-11ம் ஆண்டுகளில் பல்வேறு விதமான ராணுவ தளவாடங்கள், ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், சி130 ஜே விமானம், வி.வி.ஐ.பி., பயணிப்பதற்கான போயிங் விமானம் ஆகியவையும் அடங்கும். 10சி-17 குளோப்மாஸ்டர்-3 விமானம் மற்றும் அதனுடன் இணைந்த கருவிகள் வாங்க, கடந்த ஜூன் 14ம் தேதி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி. இந்த விமானம், 2013ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அந்தோணி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us