வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
ADDED : ஆக 22, 2011 11:19 AM
வால்பாறை: வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம் காரணமாக, தேயிலை தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை 6வது எண் எஸ்டேட்டில், ஒரு குட்டியானை மற்றும் 7 பெரிய யானைகள் புகுந்ததால், அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்கள் பணியை நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்றனர். வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் காட்டுயானைகளை ரசித்து வருகின்றனர். யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.