ADDED : ஆக 16, 2011 06:20 AM
திண்டுக்கல்:உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பை நேற்று முதல் ரத்து செய்ய அரசு கேபிள் 'டிவி' வாரியம் உத்தரவிட்டுள்ளது.உள்ளூர் சேனல்களில் அனுமதியின்றி செய்திகள் ஒளிபரப்புவதை தடை செய்து சில தினங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது.
இதனால் செய்திகள் அல்லாத பிற நிகழ்ச்சிகளை உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பின. இதையும் முறைப்படுத்தும்விதமாக, முறைப்படி டெண்டர் விடப்பட்டு அதிக தொகை செலுத்துபவர் களுக்கு உள்ளூர் சேனல் நடத்த அனுமதி வழங்குவது என்றும், அதுவரை முற்றிலும் ஒளிபரப்பை தடை செய்வது என்றும் அரசு கேபிள் 'டிவி' வாரியம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மீறி ஒளிபரப்புபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


