ADDED : ஜூலை 11, 2011 03:01 AM
கரூர்: இனாம் கரூர் நகராட்சி பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்
செந்தில் பாலாஜி, கரூர் சட்டசபை தொகுதியில் கடந்த சில நாட்களாக
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று இனாம் கரூர்
நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, ஜாமியா நகர், பெரியகுளத்துபாளையம்,
சின்னகுளத்துபாளையம், வி.வி.ஜி., நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக
சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். இனாம் கரூர்
அ.தி.மு.க., நகர செயலாளர் செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் ரேணுகா, பேரவை
செயலாளர் செல்வராஜ், மாணவரணி செயலாளர் தியாக ராஜன் உள்பட பலர் உடன்
சென்றனர்.