ADDED : ஆக 13, 2011 04:36 AM
திருவாடானை : திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா ஆக.3ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி, பால்குடம், பறவைகாவடி, வேல்காவடி நேற்று நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவெற்றியூர்- திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பாதாயத்திரையாக சென்றனர். ஆக.15ம் தேதி பூப்பல்லக்கு நடைபெறும்.