Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

ADDED : ஜூலை 21, 2024 05:11 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோல்கட்டா: நாங்கள் நேர்மறையான அரசியலை நம்புகிறோம். மக்கள் வாழ்வில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

கோல்கட்டாவில் நடந்த தியாகிகள் தினப் பேரணியில், அகிலேஷ் யாதவ் பேசியதாவது: மத்தியில் இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது, விரைவில் கவிழும். சதிகள் செய்து நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன' என்று வலியுறுத்தினார். இனவாத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் தற்காலிக வெற்றியை ருசிக்கலாம், ஆனால் இறுதியில் தோற்கடிக்கப்படும்.

ஒன்றுபட வேண்டும்!

மேற்கு வங்கத்தில் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகப் மம்தா பானர்ஜி போராடினார். அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டையும் காப்பாற்ற வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் நேர்மறையான அரசியலை நம்புகிறோம். மக்கள் வாழ்வில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us