/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை., பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழாபாளை., பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா
பாளை., பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா
பாளை., பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா
பாளை., பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா
ADDED : ஜூலை 21, 2011 02:25 AM
திருநெல்வேலி : பாளை., உத்தமபாண்டியன்குளம் லெட்சுமிராமன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.
பள்ளிமுதல்வர் சங்கரபாகம் தலைமை வகித்தார். தாளாளர் அனந்தராமன் சிறப்பு விருந்தினராக பேசினார். மாணவி தங்கம் வரவேற்றார். தமிழ் இலக்கிய மன்ற தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்களாக சுரேஷ், மணிகண்டன், ஆறுமுகச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாளாளர் அனந்தராமன், முத்தமிழின் சிறப்பு பற்றி பேசினார். ரமண வித்யாலயா மாணவி அபிஜிதா நெல்லையின் சிறப்புக்கள் குறித்து விளக்கினார். இயற்கை, நட்பு என்ற தலைப்பில் கவிதைகளை 11ம் வகுப்பு மாணவி வசுமதி, ஐஸ்வர்யா பேசினர். 'சேவை மனப்பான்மை', நெல்மணி என்ற தலைப்பில் நாடகம் நடந்தது. இடுகுறி, காரணப்பெயர் குறித்து மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர். மணிகண்டன் நன்றி கூறினார். பள்ளித் தலைமை ஆசிரியை கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


