கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்
கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்
கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்
UPDATED : ஜூலை 14, 2011 04:44 PM
ADDED : ஜூலை 14, 2011 04:38 PM
கோவை: நில அபகரிப்பு மோசடி புகார்களை விசாரிக்க புதிய பிரிவு கோவையில் துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அம்ரேஷ் புஜாரி கூறுகையில், நில அபகரிப்பு மோசடி புகார்களை விசாரிக்க புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் ஒரு அசிஸ்டென்ட் கமிஷனர்கள், 2 இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள் மற்றும், தேவையான போன் இணைப்புகள் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் 0422-2304930 அல்லது 94454 92007 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.