Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/திருந்திய நெல் சாகுபடி விவசாயத்துறை விளக்கம்

திருந்திய நெல் சாகுபடி விவசாயத்துறை விளக்கம்

திருந்திய நெல் சாகுபடி விவசாயத்துறை விளக்கம்

திருந்திய நெல் சாகுபடி விவசாயத்துறை விளக்கம்

ADDED : ஆக 14, 2011 02:33 AM


Google News

தேனி : திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயத்துறை விளக்கம் அளித்துள்ளது.

திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 2 கிலோ விதை, ஒரு சென்ட் நாற்றங்கால் தேவை. நாற்றாங்காலில் பாலித்தீன் விரிப்புகளை விரித்து சுற்றிலும் மரச்சட்டங்களை வைத்து உள்ளே மேட்டுப்பாத்திகள் அமைத்து, மண் மற்றும் தொழு உரம் நிரப்பி விதைக்க வேண்டும்.

10 முதல் 14 நாள் நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். நடவு வயல் துல்லியமாக சமன் செய்ய வேண்டும். இடைவெளிக்கு மார்க்கர் கருவியை பயன்படுத்த வேண்டும். 22.5 செ.மீ., இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

2.5 செ.மீ.,க்கு அதிகமாக நீர் பாய்ச்சக் டாது. களையெடுக்கும் கருவி மூலம் மட்டுமே களையெடுக்க வேண்டும். 10 நாளுக்கு ஒருமுறை வீதம் மொத்தம் நான்கு முறை களையெடுக்க வேண்டும். இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப தழைச்சத்து மேல் உரமாக இட வேண்டும். இவ்வாறு விவசாயத்துறை விளக்கம் அளித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us