பொறியியல் கவுன்சிலிங் 8,294 இடங்கள் ஒதுக்கீடு
பொறியியல் கவுன்சிலிங் 8,294 இடங்கள் ஒதுக்கீடு
பொறியியல் கவுன்சிலிங் 8,294 இடங்கள் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 11, 2011 11:31 PM
சென்னை : கடந்த நான்கு நாட்களில், பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் 8,294 இடங்கள், மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய கவுன்சிலிங்கில், 2,518 பேருக்கு, சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஜூலை 8 முதல், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்து வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த நான்கு நாட்களில், 8,294 இடங்கள், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலையில் 1,838 இடங்கள், அரசு மற்றும் நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 2,722 இடங்கள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 3,734 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று 3,066 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2,518 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 536 பேர் வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்த மாணவர்களில் 12 பேர், பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர். மொத்த கவுன்சிலிங் இடங்களில், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் போக, இன்னும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 66 இடங்கள் காலியாக இருப்பதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.