ADDED : செப் 25, 2011 01:08 AM
திருப்பூர் :மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட, மொத்தம் 397 பேர் வேட்பு மனு அளித்தனர்.உள்ளாட்சி தேர்தலில் @பாட்டியிட வேட்பு மனுக்கள் கடந்த 22ம் தேதி முதல் பெறப்படுகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 288 பேர் மனுத் தாக்கல் செய்தனர்; மூன்றாம் நாளான நேற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 87 பேரும், மாநகராட்சி மேயர் பதவிக்கு 3 பேர், கவுன்சிலர் பதவிக்கு 2 பேர், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2 பேர் என மொத்தம் 109 பேர் மனுத்தாக்கல் செய்தனர்; மொத்தம் 397 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.புதிதாக அமைக்கப்படும் மாவட்ட ஊராட்சியின் வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் கூட மனு அளிக்கவில்லை; நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கும் மனுத்தாக்கல் இல்லை. அதிகபட்சமாக ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மட்டும் 349 பேர் மனு அளித்துள்ளனர்.