ADDED : செப் 14, 2011 12:10 AM
கடலூர்:கடலூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது.சங்கத்
தலைவர் சண்முகம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களான கலெக்டர் அமுதவல்லி,
மாவட்ட கல்வி அலுவலர் பாரதமணி ஆகியோர் சிறந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினர். அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.முருகப்பன், சுந்தரம்,
ரங்கராஜன், வெங்கட்ராமன், குமார், வேலவன், அசோகன், திருமலை வாழ்த்திப்
பேசினர்.செயலர் நடராஜன் நன்றி கூறினார்.