ADDED : ஆக 29, 2011 10:56 PM
பாகூர் : பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாகூரையடுத்த நிர்ணயப்பட்டு நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மாரியம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழாவிற்கு செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுப்புரமணி முன்னிலை வகித்தார். பல்வேறு விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வாணிதாசன், பரிசுகள் வழங்கி பாராட்டினார். பொருளாளர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.