/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்
வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்
வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்
வன விலங்குகள் வேட்டை 200 பேர் சிக்கினர்
திருப்பூர் : தாராபுரம் பகுதியில் உள்ள கிராமங்களில் வன விலங்கு களை வேட்டையாடிய 200 பேரை வனத்துறையினர் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
தகவலறிந்த காங்கயம் வனச்சரக அலுவலர் பன்னீர் செல்வம் மற்றும் 20 பேர் அடங்கிய வனத்துறையினர் அக்கிராமங்களுக்கு சென்று கண்காணித்தனர். அப்பகுதியில் முயல், உடும்பு, முள்ளம்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட அப்பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 200 பேரை பிடித்தனர். அவர்களிடம் வனத்துறையினர், 'வனப்பகுதி மட்டுமின்றி, தனியார் நிலங்களிலும் வன விலங்குகளை வேட்டையாட கூடாது ' என எச்சரித்து அனுப்பினர்.வனச்சரகர் பன்னீர் செல்வம் கூறுகையில், ''ஆண்டுதோறும் வேட்டை திருவிழா என்ற பெயரில் முன்னோர்கள் செய்ததாக கூறி குறிப்பிட்ட நாளில் விலங்குகளை வேட்டையாடுகின்றனர். வேட்டையாட வந்தவர்களை எச்சரித்து அனுப்பப்பட்டனர்; முயல்களை வேட்டையாடிய மூலனூர், சாணார்பாளையம், பெரமியம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், சதீஷ், சரவணன், கருணாநிதி உள்ளிட்ட 5 பேருக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்த 5 முயல்களும் கைப்பற்றப்பட்டது, என்றார்.


