ADDED : ஜூலை 16, 2011 02:35 AM
கள்ளக்குறிச்சி:பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து
கொண்டார்.சின்னசேலம் அடுத்த நாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன்
சிவா(14).
இவர் கடந்த 2ம் தேதி பள்ளிக்கு செல்லாததால் இவரது தாய் மலர்
கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவா வீட்டிலிருந்த பூச்சி மருந்தை
குடித்து மயங்கினார். உடனடியாக சேலம் தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.