Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால்... பாதிப்பு : எமனேஸ்வரம் மக்கள் துர்நாற்றத்தால் தவிப்பு

பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால்... பாதிப்பு : எமனேஸ்வரம் மக்கள் துர்நாற்றத்தால் தவிப்பு

பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால்... பாதிப்பு : எமனேஸ்வரம் மக்கள் துர்நாற்றத்தால் தவிப்பு

பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால்... பாதிப்பு : எமனேஸ்வரம் மக்கள் துர்நாற்றத்தால் தவிப்பு

ADDED : செப் 11, 2011 11:15 PM


Google News

பரமக்குடி : பரமக்குடி அடுத்த எமனேஸ்வரம் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள், வலது பிரதான கால்வாயில் கலக்கிறது.

துர்நாற்றத்திற்கு மத்தியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். வைகை அணையில் பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்களாக பிரிந்து செல்கின்றன. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. கால்வாயின் பெரும்பாலான பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்தும், நாணல்கள் படர்ந்தும் நீர்வழித்தடம் தடைபட்டுள்ளது. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேஸ்வரத்தின் ஆறு வார்டுகளில் இருந்தும் வெளியேறும் கழிவுகள், வைகை ஆற்றில் கலப்பதுடன், பிரதான கால்வாய்களிலும் சங்கமிக்கின்றன. பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரில் இந்த கழிவுகள் கலந்து வருகிறது. இதன் காரணமாக கால்வாய்களை ஒட்டி வாழும் பகுதி மக்கள் துர்நாற்றத்தில் தவிக்கின்றனர். எமனேஸ்வரம் கிறிஸ்தவ காலனி அருகே மேம்பாலம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் கால்வாய் மறைந்து வருகிறது. பாசன கால்வாய்களை பாதிக்காத வகையில் கழிவுநீர் செல்ல வேறு வழி ஏற்படுத்த வேண்டும். குப்பைகளை பாசன கால்வாயில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு, பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us